உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடந்து வரும் அமைதியான விவசாயிகள் இயக்கத்திற்கு எதிராக பாஜக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது. இதற்கு எதிராக சனியன்று மாநிலம் முழுவதும் அகில இந்திய விவசாய சங்கத்தினர் தலைமையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கறுப்பு தினத்தை கடைபிடித்து போராட்டம் மற்றும் பேரணியை நடத்தினர். மேலும் அரசின் அடக்குமுறைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.